Saturday, November 4, 2017

யோக மார்க்கம்

யோக மார்க்கத்தில் இருப்பது என்று நான் எதைச் சொல்லுகிறேனென்றால் தெய்வத்துடன் ஒன்றியிருப்பதொன்றே அர்த்தமுள்ள வாழ்கையாகும் என்கிற உணர்வில் இருப்பதுதான்.


நமது ஆர்வத்தின் குறிக்கோளெல்லாம் இந்த ஒன்றே ஒன்றுதான்.
தெய்வத்துடன் ஒன்றியிருக்கும் வாழ்க்கை ஒன்று தான் வாழத் தகுந்தது.
மற்ற எந்த விசயத்திற்கும் ஒரு மதிப்பும் இல்லை; தியாகம் செய்ய வேண்டியது என்று எதுவும் இல்லை.
எந்த ஆசையுமே இல்லாத போது எதைத் தியாகம் செய்வது?
தெய்வத்துடன் ஒன்றியிருப்பது வாழ்வின் குறிக்கோளாக இல்லாத பட்சத்தில் ஒருவன் இன்னும் யோக மார்க்கத்தில் காலடி எடுத்து வைக்கவில்லை என்றுதான் சொல்லுவேன்.
ஸ்ரீ அன்னை.

ஸ்ரீ அன்னை

அவளருகில் இருப்பது ஆழ்ந்த ஆனந்தமாகும்; இதயத்தில் அவளை உணர்வது வாழ்வை ஓர் ஆனந்தப் பரவசமாக, அற்புதமாக ஆக்குவதாகும்; வனப்பும், வசீகரமும், மென்மையும் கதிரவனிலிருந்து ஒளி வருவதுபோல்அவளிடமிருந்து பெருகி வருகின்றன.
அவள் தனது அற்புத நோக்கை நாட்டுமிடமெல்லாம், புன்னகை எழிலைப் பொழியுமிடமெல்லாம் ஆன்மா பிடிபட்டு, அவளுக்கே ஆட்பட்டு, அளவில்லா ஆனந்தத்தின் ஆழங்களில் அமிழ்தப்படுகிறது.
அவள் கரங்களின் ஸ்பரிசம் காந்தம் போன்றது.
அவற்றின் இரகசிய நுண்ணிய பிரபாவம் மனத்தையும், பிராணனையும், உடலையும் மாசு நீக்கி நயமாக்குகிறது.
அவள் மலரடிகளை ஊன்றிய இடமெல்லாம் அற்புதப் பரவசானந்த ஓடைகள் பொங்கிப் பாய்கின்றன.
 ஸ்ரீ அரவிந்தர்.
நன்றி: அகில இந்திய இதழ், நவம்பர் 2015, ப. 35.

ஸ்ரீ அரவிந்தரையும் என்னையும் உதவிக்கு அழை.

ஸ்ரீ அரவிந்தரையும் என்னையும் உதவிக்கு அழை.
அருள் எப்பொழுதும் செயல்படக் காத்‌திருக்கிறது .
ஆனால் நீ அதைச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
அதன் செயலை எதிர்க்கக்கூடாது .
தேவையான ஒரே நிபந்தனை நம்பிக்கைதான்.
உன்னை எதாவது தாக்குவதாக நீ உணரும்போது ஸ்ரீ அரவிந்தரையும் என்னையும் உதவிக்கு அழை.
உன்னுடைய அழைப்பு உண்மையானதாக இருந்தால், அதாவது நீ உண்மையாகவே குணமடைய விரும்பினால், உன்னுடைய அழைப்பிற்கு பதில் கிடைக்கும்.
அருள் உன்னைக் குணப்படுத்தும்.
.
ஸ்ரீ அன்னை.

Thursday, November 2, 2017



Faith is Miracle


People do not know how important is faith, how faith is miracle, creator of miracles. 
If you expect at every moment to be lifted up and pulled towards the Divine, He will come to lift you and He will be there, quite close, closer, ever closer.
The Mother.

Never grumble.




Never grumble. 


All sorts of forces enter you when you grumble and they pull you down. 
Keep smiling. 
I seem always to be joking but it is not mere joking. 
It is a confidence born from the psychic. 
A smile expresses the faith that nothing can stand against the Divine and that
everything will come out all right in the end.
The Mother.