Saturday, November 4, 2017

ஸ்ரீ அன்னை

அவளருகில் இருப்பது ஆழ்ந்த ஆனந்தமாகும்; இதயத்தில் அவளை உணர்வது வாழ்வை ஓர் ஆனந்தப் பரவசமாக, அற்புதமாக ஆக்குவதாகும்; வனப்பும், வசீகரமும், மென்மையும் கதிரவனிலிருந்து ஒளி வருவதுபோல்அவளிடமிருந்து பெருகி வருகின்றன.
அவள் தனது அற்புத நோக்கை நாட்டுமிடமெல்லாம், புன்னகை எழிலைப் பொழியுமிடமெல்லாம் ஆன்மா பிடிபட்டு, அவளுக்கே ஆட்பட்டு, அளவில்லா ஆனந்தத்தின் ஆழங்களில் அமிழ்தப்படுகிறது.
அவள் கரங்களின் ஸ்பரிசம் காந்தம் போன்றது.
அவற்றின் இரகசிய நுண்ணிய பிரபாவம் மனத்தையும், பிராணனையும், உடலையும் மாசு நீக்கி நயமாக்குகிறது.
அவள் மலரடிகளை ஊன்றிய இடமெல்லாம் அற்புதப் பரவசானந்த ஓடைகள் பொங்கிப் பாய்கின்றன.
 ஸ்ரீ அரவிந்தர்.
நன்றி: அகில இந்திய இதழ், நவம்பர் 2015, ப. 35.

No comments:

Post a Comment