அவளருகில் இருப்பது ஆழ்ந்த ஆனந்தமாகும்; இதயத்தில் அவளை உணர்வது வாழ்வை ஓர் ஆனந்தப் பரவசமாக, அற்புதமாக ஆக்குவதாகும்; வனப்பும், வசீகரமும், மென்மையும் கதிரவனிலிருந்து ஒளி வருவதுபோல்அவளிடமிருந்து பெருகி வருகின்றன.
அவள் தனது அற்புத நோக்கை நாட்டுமிடமெல்லாம், புன்னகை எழிலைப் பொழியுமிடமெல்லாம் ஆன்மா பிடிபட்டு, அவளுக்கே ஆட்பட்டு, அளவில்லா ஆனந்தத்தின் ஆழங்களில் அமிழ்தப்படுகிறது.
அவள் கரங்களின் ஸ்பரிசம் காந்தம் போன்றது.
No comments:
Post a Comment