Thursday, November 2, 2017

பிரார்த்தனைகள் பலன் அளிக்குமா

பிரார்த்தனைகள் பலன் அளிக்குமா என்ற ஐயம் பலருக்கு உண்டு.
பலன் மட்டுமல்ல; பிரார்த்தனைகளே அவசியம் தானா என்றும், அச்செயல் பகுத்தறிவுக்குப் பொருந்தாது என்றும் பலர் நினைக்கிறார்கள்.


அகங்கார இச்சையுடன் கடவுளை மன்றாடியும், காணிக்கை செலுத்தியும் அவரை திசை திருப்பி விட முடியாது என்பது உண்மைதான்.
தெய்வத்திற்கு ஒரு சங்கல்பம் உள்ளது.
ஓர் உள்நோக்கம் உள்ளது.
அதற்கேற்பதான் அது செயலாற்றும்.
அனைத்தும் கடந்த கடவுள் அனைத்துமையுமே அறிவாராகையால் அவரது பேரறிவுக்கு அளவற்ற தொலை நோக்கு உண்டு.
எதை, எப்போது, எப்படிச் செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.
யாரும் அவருக்கு வழி காட்டவோ, தூண்டி விடவோ தேவை இல்லை.
ஸ்ரீ அரவிந்தர்.
அகில இந்திய இதழ், ஆகஸ்ட் 2009, ப. 9.

No comments:

Post a Comment