Thursday, November 2, 2017

சரணாகதி

உனக்காகச் சரணத்தையும் தெய்வ சக்தியே செய்யும் என்ற தவறான, சோம்பேறித்தனமான எண்ணத்தையும் ஒழி.
நீ அவளிடம் சரணடைய வேண்டும் என்று பரமன் கோருகிறான், ஆனால் உன்னைச் கட்டாயப்படுத்தவில்லை.


இறுதித் திருவுருமாற்றம் ஏற்படும் வரை எந்தக் கணமும் நீ இறைவனை மறுத்து விலக்கவோ, அல்லது உனது சமர்ப்பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளவோ உனக்குச் சுதந்திரம் உண்டு.
ஆனால் அதன் ஆன்மிக விளைவுகளை நீ அனுபவிக்க ஆயத்தமாய் இருக்க வேண்டும்.
உனது சரணம் நீயே சுதந்திரமாகச் செய்ததாய் இருக்க வேண்டும்.
அது ஓர் உயிருள்ள ஜீவனின் சரணமாக இருக்கவேண்டும்.
உயிரற்ற ஓர் இயந்திரத்தின் அல்லது கருவியின் இயக்கமாக இருக்கக் கூடாது.
ஸ்ரீ அரவிந்தர்.

No comments:

Post a Comment